Saturday, February 1, 2014


தந்தை பெரியார் நீர்வண்ண ஓவியம்.
ஓவியர் ஆர்.ராஜராஜன்


தந்தை பெரியாரின் நீர்வண்ண ஓவியம். புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நாள்காட்டிக்காக தீட்டப்பட்ட ஓவியம். இன்று பரவலாக பல தளங்களில் பயன் படுத்தப்படும் இந்த ஓவியம் மிக அவசரமாக தீட்டப்பட்ட எனது ஓவியங்களில் ஒன்று. மிக அழகாக அய்யாவின் ஓவியம் வந்திருப்பதை அறிந்து விடுதலை பதிப்பகத்திலிருந்து பாராட்டுதல்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள். ஓவியத்தின் மீதான விருப்பத்தினால் தந்தை பெரியாரின் 134 ஆவது பிறந்த நாள் மலரில் முகப்பு அட்டைக்காக பயன்படுத்திக் கொள்ள விரும்பினார்கள்.மிகுந்த மகிழ்ச்சியோடு அருமை நண்பர் .திரு.வீரமோகன் ( தலைவர்.த.பெ.தி.க. புதுச்சேரி ) அவர்களிடம் தெரிவித்தேன். , உடன் அனுப்பி வையுங்கள் .உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. அய்யாவின் ஓவியம் பிறந்த நாள் மலரில் இடம் பெறுவது உங்களுக்கு பெருமை என்று கூறினார். அந்த மலர் மிக அழகாக வந்திருந்தது. இதன் ஒரிஜினல் ஓவியம் என்னிடமே உள்ளது ,அதை தற்போது எனது வகுப்பறையில் மாணவர்களின் பார்வைக்காக வைத்துள்ளேன். இதனை தொடர்ந்து ஐந்துக்கும் மேற்பட்ட பெரியார் அவர்களின் ஓவியங்களை தீட்டினேன் இருந்தாலும் இந்த ஓவியத்தின் வசீகரம் எனது மற்ற ஓவியங்களுக்கு அமையவில்லை. அருமை நண்பர்களுக்கு இந்த தகவலை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன்.



தந்தை பெரியார் நீர்வண்ண ஓவியம்

No comments:

Post a Comment