Tuesday, May 17, 2016

ஓவியர்.ஆர்.ராஜராஜன் -காலக் குறிப்பு



காலக் குறிப்பு
ஓவியர் ஆர்.இராஜராஜன் .M.F.A.,(Pai)  M.Sc.,(App.Des&Pai) P.G.D.F.A.,(Pai) D.F.A.,(Pai)
National Recognized Artist
Voter Member - Lalit Kala Akademi, New Delhi
Reg-1.D.No. LKA/2100/1993 NEA 36(118)
பிறப்பு : 30.12.1957, மயிலாடுதுறை-609 001
நாகப்பட்டினம், மாவட்டம்.

பணி நிலை               
·         தேசிய ஓவியர்,
·         ஓவிய பேராசிரியர்
·         சுவரோவிய வடிவமைப்பாளர்
·         எழுத்தாளர்
துணை பேராசிரியர் - ஓவியம், நுண்கலைத்துறை,
பாரதியார் பல்கலைக்கூடம்,                  
(புதுவை மத்திய பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரி)
அரியாங்குப்பம், புதுச்சேரி-605 007.

கலை புகட்டிய பேராசிரிய பெருமக்கள். திரு.A.P.சந்தானராஜ்,
டாக்டர்.அல்போன்ஸோ அருள்தாஸ், திரு.S.G.வித்யாசங்கர் ஸ்தபதி, திரு.R.B. பாஸ்கரன்திருமதி லீலா கணபதி, திரு.C.தட்சணாமூர்த்தி,  திரு. சீ.ரெங்கராஜன், திரு.G.கங்காதரன்,டாக்டர்.கே.கந்தன், போன்ற பெருமக்கள்.
அனுபவம் - கலைக்கல்வி :
1973-ஆம் வருடம் முதல் பள்ளி படிப்பிலேயே வர்த்தக விளம்பரக் கலைகளில் ஈடுபட்டு வந்த அனுபவத்துடன் ஓவியதிறனை மேம்படுத்த முயற்சி.
1980-85-ல் கும்பகோணம் அரசினர் கலைத்தொழில் கல்லூரியில் ஐந்தாண்டுகள் D.F.A., PAINTING, FIRST CLASS  ஓவிய நுண்கலைப்பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி.
1986-சென்னை அரசினர் கவின் கலைக்கல்லூரியில் P.G.D.F.A.,PAINTING ,FIRST CLASS, FIRST RANK.  ஓராண்டு முதுநிலை ஓவிய நுண்கலைப்பட்டயம். முதல் வகுப்பில் முதல் மாணவராக தேர்ச்சி.
2009-புனே திலக் மஹாராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் M.Sc., APPLIED DESIGN & PAINTING, FIRST CLASS, முதல் வகுப்பில் தேர்ச்சி.
2014 இல் திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் M.F.A., PAINTING, FIRST CLASS WITH DISTINCTION" முதுகலை ஓவியப் பட்டம்- முதல் வகுப்பு, பெருமைத்தகுதியில் தேர்ச்சி.
1991-இல் புதுவை பாரதியார் பல்கலைக்கூடத்தின் ஓவிய பயிற்றுனராக நியமிக்கப்பட்ட பின்பு ஓவியர் திரு.K.M.ஆதிமூலம், திருC..தட்சணாமூர்த்தி, திரு. P. மாணிக்கம் ஆகிய ஓவியர்களின், ஆலோசனைகளோடு கூடிய கடின உழைப்பால் தேசிய அங்கீகாரத்தை அடைதல்.
1996-இல் ஓவிய விரிவுரையாளராக பதவி உயர்வு பெறுதல்
2005-புதுவை பல்கலைக் கழகத்தில், பல்கலைக்கழக  மாநியக் குழுவின் கல்லூரி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி (UGC ORIENTATION COURSE )
 2011-இல் ஓவியப் பேராசிரியாக பதவி உயர்வு பெறுதல்.
கலந்து கொண்ட ஓவியக் கண்காட்சிகள் குறிப்பிடத்தக்கவை:
 36-ஆவது தேசியக் கலைக் கண்காட்சி, புதுடெல்லி – 1993
52-ஆவது AIFACS அகில இந்திய கலைக் கண்காட்சி, புதுடெல்லி-1995.
“அகில இந்திய கோட்டோவிய கண்காட்சி” , புதுச்சேரி-1992.
 “அகில இந்திய கலைக் கண்காட்சி”, கலாபீடம், குண்டூர்-1994.
 “40-ஆவது தேசிய கலைக் கண்காட்சி”, பெங்களுர்-1997.
  மண்டல ஓவியக்கண்காட்;சிகள் லலிதகலா அகடமி, சென்னை, பெங்களுர், கொச்சி, 1995.
 புகழ்பெற்ற தென்னிந்திய கலைஞர்களின் கலைக்கண்காட்சி, திரிச்சூர் (கேரளா) 1999.
சர்வதேச ஓவியக்கண்காட்சி, புதுச்சேரி-1992.
கலா மேளா ,புது டெல்லி -1997.
மண்டலக் கலை கண்காட்சி, கேம்லின் ஆர்ட் பவுண்டேஷன்,சென்னை-2004, பெங்களுர்-2002.
 மண்டல ஓவியக்கண்காட்சி (கேரளா லலிதகலா அகடமி) சென்னை லலிதகலா அகடமிகொச்சி-2001.
 அகில இந்திய கோட்டோவிய கண்காட்சி, புதுவை-1991.
தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு கலைகண்காட்சி -1982, 1997.
பாஸ்கர் ஆர்ட் அகடமி கலைக்கண்காட்சி, சிங்கப்பூர்-2001.
தேசிய ஓவியர்களின் கண்காட்சி புதுச்சேரி- 2007
கேம்லின் ஆர்ட், பெண்டேஷன் மண்டலக்கலைக் கண்காட்சி,கொச்சி-2009.
 தானே புயல் நிவாரண ஓவியக்கண்காட்சி, ஆனந்தவிகடன் குழுமம் சார்பாக லலிதகலா அகடமி, சென்னை - 2012.
குழு கண்காட்சிகள் :
“ஒவியம்”-83 கும்பகோணம் - 1993.
பெங்களுர் சித்ரகலாபரிஷத் - 1986.
 அலையன்ஸ் பிரான்ஸீஸ், புதுச்சேரி-1998.
 "NUANCE" குழுகண்காட்சி லலிதகலா அகடமி, சென்னை-1997.
 பெங்களுர் சித்ரகலாபரிஷத் கலைகூடத்தில் -2001.
ஓவியர் ஆதிமூலம் அவர்களின் நினைவு ஓவியக் கண்காட்சி, POPNI ஐ சார்பாக, புதுச்சேரி-2008.
 “REBIRTH” ஓவியக் கண்காட்சி சேதுராமன் ஆர்ட் கேலரி-புதுச்சேரி-2010.
புதுச்சேரி ஓவியர்களின் கலைக்கண்காட்சி சேகா ஆர்ட்கேலரி, புதுச்சேரி-2011.
ART FEAST-12” M.F.A. மாணவர்களின் கண்காட்சி, அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருச்சி - 2012.
 “FEEL OF CREATIONS” குழுகண்காட்சி ART BEAT கேலரி,  POPNI  சார்பாக, புதுச்சேரி-ஏப்ரல்-2012.
தனிநபர் கண்காட்சி :
“சுனாமி சீற்றங்கள்”,பெரியார் திராவிடர்கழகம் சார்பாக, புதுச்சேரி-2005
கலந்துகொண்ட ஓவிய முகாம்களில் குறிப்பிடத்தக்கவை :
 தென்மண்டல கலாச்சார மையம் நடத்திய கலை முகாம்கள் 1993 முதல் 1997 வரை.
தேசிய ஒவியர் முகாம் லலித்கலா அகடமியின் சார்பாக, புதுச்சேரி-1992.
அகில இந்திய கலை, கைவினை திருவிழாவின் ஓவியர் முகாம், சென்னை-1993.
 “ஓவியர் முகாம்”, இந்திய ஓவியர் நல சங்கம் சார்பாக, ஊட்டி-1996.
 “ஒவியர் முகாம்”, தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு, சென்னை-1998.
“ஓவியர் முகாம்”, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சென்னை-1999.
 நெய்வேலி ஓவியர் கழகம் நடத்திய “ஓவியர் முகாம்”, நெய்வேலி-1996.
குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்காக புதுவை பத்திரிக்கையாளர்கள் - ஓவியர்கள் இணைந்து நடத்திய “ஓவியர் முகாம்”-2001.
 லலித்கலா அகடமி, ரீஜனல் சென்டர், சென்னை சார்பாக கலைத் திருவிழா மண்டல “ஓவியர் முகாம்” - 2007.
 தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் நவீன ஒவியர்கள் கலைமுகாம், அரசினர் கவின் கலைக்கல்லூரி - சென்னை-2008.
 புதுவை பல்கலைக்கழக ஓவியர் முகாம், புதுச்சேரி-2009.
சென்னையில் உலக அமைதிக்காககிருஷ்னகிரியை சேர்ந்த                          அருள்  திரு.வசந்த் குருதேவ் பர்ஷவ பத்மாவதி சக்திபீடம் ஏற்பாடு செய்த இருபதாயிரம் மாணவர்களும் ,தமிழகத்தின் முன்னனி ஓவியரக்ளும் கலந்து கொண்ட பிரமாண்ட   ஓவிய முகாம்- 2009
கலந்துகொண்ட செயல் விளக்க விரிவுரை நிகழ்ச்சிகள் :
நெய்வேலி ஜவகர் பள்ளியில் ஓவிய செயல்விளக்க வகுப்பு -1998.
புதுச்சேரி ஜெயராணி மேல்நிலைப் பள்ளியில் “புதுவை புதிய தூரிகைகள்” சார்பாக “இராஜராஜனின் டெமோ-2000”,ஓவிய விரிவுரை நிகழ்ச்சி-2000.
புதுவை ஜீவானந்தம் மேல்நிலைப் பள்ளியில் புதுவைமாநில ஓவிய ஆசிரியர்களுக்கான ஓவிய விரிவுரை செயல் விளக்க வகுப்பு -1997.
 புதுவை தாகூர் கலைக்கல்லூரியின் தமிழ் துறையில் “ஒவிய மொழி” எனும் சிறப்புரை - 2002.
ஆரோவில் நியூ கிரியேஷன் பள்ளியில் குழந்தைகளுக்கான சிறப்பு ஓவிய வகுப்பு - 2002.
புதுவை மாநில கலை ஆசிரியர்களுக்கான சிறப்பு வகுப்பு, புதுச்சேரி-2007.
 ஆரோவில் நடுக்குப்பம் நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழலை விளக்கும் மிகப்பெரிய பதாகை ஓவியம்தீட்ட மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு-2007.
 கோயம்புத்தூர், கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் சார்பில் பொங்கல்  விழா ஓவிய பயிற்சிப்பட்டறை கலை இயக்குனராக-2010.
 “அனுபவ பகிர்வு” ஒளிப்படக்காட்சி, பாரதியார் பல்கலைக்கூடம் 2010
 “ஒளிப்படக்காட்சி” சேகாஆர்ட் கேலரியில், புதுச்சேரி-2011.
 “சிறப்பு வகுப்பு” கடலூர் மாவட்ட ஓவிய ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி பேராசிரியராக, வடலூர்-2011.
“சிறப்பு வகுப்பு” புதுவை மாநில ஜவஹர் பால்பவன் ஓவிய, இசை ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி வகுப்பு பேராசிரியராக, புதுவை-2012.
திருச்சியில் இயங்கி வரும்,  " கேர்" (  CARE, SCHOOL OF ARCHITECTURE )  கட்டிடக்கலை மாணவவர்களுக்கு சிறப்பு வகுப்பு, 2013.
பத்திரிக்கை பிரசுரங்கள்  வெளியீடுகள் :
தேசிய அளவில் பிரபலமான 2000 ஓவியர்களின் விபரத் தொகுப்பு (ARTIST’S DIRECTORY)  டெல்லி லலிதகலா அகாடமி வெளியீடு மூன்றாம் பதிப்பு 2006.
ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், புதிய தலைமுறை, கல்கி, கல்கி தீபாவளி மலர் 2010, குங்குமம், நுண்கலை, தினமணி, தினமணி ஞாயிறு கொண்டாட்டம் -13-3-2011, தினமலர், தினத்தந்தி, மாலைமலர், ஹிந்து, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் ஹெரால்டுநியூஸ் டைம்தி சன்டே இன்டியன், டெக்கான் கிரானிக்கல் போன்ற இதழ்களில் செய்திகள், ஓவியங்கள் பிரசுரமாகியுள்ளன.
இராஜராஜன் எழுதிய கட்டுரைகள், வெளியீடுகள் :
வரலாற்றில் நவீன ஓவியமும் ஓவியனும்” என்ற தலைப்பில் இராஜராஜன் எழுதிய ஓவியம் பற்றிய குறுநூல் புதுவை புதிய தூரிகைகள் சார்பாக புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு ந.அரங்கசாமி அவர்களால் 17.9.2000 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
புதுவையிலிருந்து வெளியான தமிழர் பறை என்ற பகுத்தறிவு சிற்றிதழுக்கு உணர்ச்சி மிக்க முகப்பு அட்டை படமும் தமிழர்களின் கலையும் வாழ்வியலும் எனும் தொடரும் எழுதப்பட்டுள்ளது-2000.
ஓவியம்” எனும் சிற்றிதழிலும் புதுவை மாநில ஓவியர் மன்ற வெள்ளி விழா மலரிலும் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
தினமணியில் “கள்ள ஓட்டு மூலம் நல்ல ஆட்சியா ? எனும் கட்டுரையில், தேசிய அடையாள அட்டையை வலியுறுத்தல் (29.05.2002).
தினமணி வெள்ளிமணியில் “பாழாகிவரும்; பாரம்பரியக் கலைச் செல்வங்கள்”  எனும் தமிழக கலைகள் தொடர்பான கட்டுரை (23.08.2002).
 தினமணி வெள்ளி மணியில் “கஜம்ஹார மூர்த்தி” எனும் சமயம் மற்றும் சிற்பக்கலை பற்றிய கட்டுரை (25.04.2003) வெளியாகி உள்ளன.
ஆனந்தவிகடன் தீபாவளி மலர் 2006-இல் (பக்.130)“புதைந்து கிடக்கும் வரலாறு” எனும் சோழர் காலம் குறித்த வரலாற்றுக் கட்டுரை பிரசுரமாகியுள்ளது.
“புதுச்சேரியின் புத்தோவியச் சுவடுகள்” எனும் தலைப்பில் தேசிய விருது பெற்ற ஓவியர் P.மாணிக்கம், முனைவர் சிற்பி ஜெயராமன் ஆகியோரின் கலைப்பணிகளின் காலப்பதிவு வெளியீடு - புதுச்சேரி கலைவடிவமைப்புக்குழு சார்பாக புதுச்சேரியில் வெளியிடப்பட்டது - 2005.
கும்பகோணம் அரசினர் கவின்கலைக் கல்லூரி பேராசிரியர் திரு.சீ.ரெங்கராஜன் அவர்களின் கலை வாழ்வின் பயணம் பற்றிய சிறு தொகுப்பு, அவரின் அரசுப்பணி ஓய்வு நாளில் கும்பகோணம் கவின்கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சார்பாக 31.12.2010 அன்று வெளியிடப்பட்டது.
தளம்  இலக்கிய இதழில் ( ஏப்ரல் 2015 ) கலையும்  -கலைஞனும் எனும் கட்டுரை பிரசுரமாகியுள்ளது.
இராஜராஜன் எழுதிய ஓவியக்கலை, சிற்பக்கலை மற்றும் கலைஞர்கள் குறித்த கட்டுரைகள்
“சிவ ஒளி” பக்தி இதழில் ஜூலை 2008 முதல் பிரசுரமான 21 கட்டுரைகள் பட்டியல்.
1.          கடல் விழுங்கிய காவியம். சங்ககால பூம்புகாரின்                                                      சிறப்புக்கட்டுரை-ஜூலை 2008.
2.          தமிழர் கலைகளும் கஜசம்ஹாரகரும் -ஆக-2008.
3.          தமிழக படிமச் சிற்பக்கலையின் சிகரம் ரிஷப வாகனத் தேவர் -  செப்-                 2008.
4.          கடவுளையே சபித்த கடுவெளிசித்தர் - அக்-2008.
5.          உலகப் புகழ் பெற்ற சுதை ஓவியங்கள் - நவ-2008.
6.           தஞ்சை பெருவுடையார் கோவில் சுதை ஓவியங்கள் -டிச-2008.
7.           ஐரோப்பிய கலைத்தளம் - ஜன-2009.
8.           டாவின்ஸியின் சுவரோவியம் - பிப்-2009.
9.           மண்ணின் மரபுக்கலைஞர்கள் - மார்ச் 2009.
10.         தேர் சிற்பக் கலைஞர் ஏகாம்பர ஸ்தபதியார் - ஏப்-2009.
11.         தெய்வீகக் கலை கருவூலங்கள், தேவதாசிகள் - மே-2009.
12.         மண்ணறைத் துளைகளில் பெருகும் மாமன்னனின் உயிர் மூச்சு                              ஜூன்2009
13.          தற்கால ஓவியக்கலை - மரபும் நவீனத்துவமும் - ஜூலை-2009.
14.          கலை-கலைஞன் - செப் 2009.
15.          பெருமாக்கலைஞர் சாக்கோட்டை V.K.S சிவம், ஸ்தபதி - அக்-2009.
16.          உள் மன ஓவியமாய் குழையும் குரு பக்தி - டிச. 2009.
17.          கலைஞானத்தின் இருபக்கங்கள் - விஞ்ஞானமும் - மெய்ஞானமும் -                  ஜன-2010.
18.          திருவாரூர் வண்ணக்காரன் நடேசன் பிள்ளை - மே - 2011.
19.          சோழன் கரிகாற்பெருவளத்தான் (சிறுகதை) - ஆக-2011.
20.          புதுச்சேரி வரலாற்றில் அழிந்து வரும் அரிக்க மேட்டின் அரிக்காத                                   பகுதிகள்டிச. 2012.
21.         சீரழிந்து வரும் கீழ்வாலை ஓவியங்கள்.   ஜன . 2013.

இணைய தள கட்டுரை :
ஓவியர் விஸ்வத்தின் அழகியல் விழுமியங்கள் - தமிழகத்தின் சிறந்த ஓவியர்களுள் ஒருவரான விஸ்வத்தின் ஓவியங்கள் குறித்த கட்டுரை. முகவரி http://rajarajanartist.blogspot.in/2012/02/blog-post_27.html

நிறைவு பெற்று பதிப்பிக்க உள்ள நூல்கள்
1.            ஓவியக்கலை - (250 பக்கம்)
2.            அழகும் - அருளும் - (200 பக்கம்)

மிகப்பெரிய ஓவியப் பணிகள்
 உலகின் மிகப் பெரிய காகித ஓட்டோவியம் (PAPER COLLAGE) “லாஸ்ட் சப்பர்” எனும் புகழ்பெற்ற ஓவியத்தை 23 அடி நீளமும் 7¼ அடி உயரமும் கொண்ட பிரமாண்டமான அளவில் ஓவிய பாட திட்டத்தின் செயல் விளக்கமாக 8 மாணவர்களை இணைத்து உருவாக்கிய சாதனை(2008-2009ம் கல்வியாண்டில் 11 மாதகாலம்).
 2009- ஆம் ஆண்டு ஈரோடு ரேமண்ட் ஷோரூம் உட்புறம் பிரமாண்டமான மியூரல் எனப்படும் சுவரோவியம், பழந்தமிழக வாழ்வியல் காட்சியை 38 அடி உயரமும் 20 அடி அகலமும் கொண்ட தமிழகத்தின் மிகப் பெரிய அளவில் தீட்டப்பட்ட வர்த்தக நிறுவனத்தின் உள் அலங்கார ஓவியப் பதிவு.
 2010-ம் ஆண்டு B.V.A., ஓவியப் பாடதிட்டத்தில் செயல் விளக்கத்திற்காக 12 அடி நீளமும் 6 அடி உயரமும் கொண்ட காகிதத்தில் DRY PASTEL எனும் வண்ணக் கட்டிகளைக் கொண்டு பிரமாண்டமாக சங்ககால பூம்புகாரில் எழில் மிக்க காட்சிகளை 8 மணி நேரத்தில் மாணவர்களுக்கு முன் ஓவியமாக தீட்டிய பதிவு -2010
கள ஆய்வுப் பணிகள்:
 புதுச்சேரி சின்ன வீராம்பட்டிணத்தில் தொடர்மழை காரணமாக இடிந்து விழுந்த மீனவரின் பழமையான வீட்டுச் சுவரில் காணப்பட்ட 100 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய பாரம்பரிய வைணவ ஓவியத் தொகுப்பினை உள்ளுர் ஓவியர். திருநாவுக்கரசு மற்றும் பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் ளு. பிரபாகரன், P. முருகன் ஆகியோர் உதவியுடன் சுண்ணாம்ப படலத்தை நீக்கி சுத்தப்படுத்தி பிரெஞ்சு காலனியாக திகழ்ந்த புதுச்சேரியில் பாரம்பரிய ஓவிய தொடர்ச்சியினை  ஊடகங்கள் வாயிலாக பதிவு செய்தது (தினமணி-ஜனவரி 3.2009).
 புதுச்சேரியை அடுத்த குயிலாப்பாளையத்தில் பழங்கால வீட்டுச்சுவரில் தீட்டப்பட்டிருந்த 100 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய சைவ ஓவியத் தொகுப்பினை உள்ளுர் ஓவியர் சிவக்குமார், ஓவியர் திருநாவுக்கரசு ஆகியோரின் உதவியுடன் சுத்தம் செய்து புதுச்சேரியில் மிக அரிதாக காணப்பட்ட பாரம்பரிய சுதை ஓவியப்பதிவை ஊடகங்கள் வாயிலாக பதிவு செய்தது. (தி ஹிந்து மார்ச் 25.2009).
 சங்க காலத்தில் காவிரியாறு பூம்புகாரின் கடை அணையிலிருந்து (சட்ரேஸ்) பண்டைய படகுதுறை வழியே சென்று தற்போதைய கடைக்காட்டிற்கும் பூம்புகாரில் கலைக் கூடத்திற்கும் இடையே கடலில் கலந்தது. கடல் கோள் காரணமாக பாதை தூர்ந்து தடைபட்ட காவிரியாறு தற்போதைய கடை அணையான சட்ரேஸ் பகுதியிலிருந்து தெற்காக தடம்மாறி பூம்புகாரின் தெற்குபுறம் கடலில் கலந்த புவியியல் மாறுதலை 2007ம் ஆண்டு நேரில் ஆய்வு செய்து நாசா செயற்கை கோள் வரைபடம் மூலம் உறுதி செய்து 2008ம் ஆண்டு ஜூலை “சிவ ஒளி” இதழில் பதிவு செய்தது.
விழுப்புரம் மாவட்டம் கீழ்வாலை ஓவியங்கள் கல்குவாரி தொழிலால் பாதிப்படைவதை 10.5.2008ல் நானும் ஒவியர் அன்பழகன் மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் திரு.கோ.சுகுமாரன் புகைப்படக் கலைஞர் திரு. செந்தமிழ் இனியன் மற்றும் சமூக அமைப்பு உறுப்பினர்களுடன் இணைந்து உண்மை அறியும் குழுவாக சென்று ஓவியங்களின் பாதிப்பை அறிந்தோம்.
26.6.2011   ல் நானும் புகைப்படக் கலைஞர் புதுவை இளவேனில் அவர்களுடன் சென்று மீண்டும் கீழ்வாலை ஓவியங்களின் நிலையை அறிந்து செய்தித்தாள் ஊடகங்கள் வாயிலாக கவன ஈர்ப்பை கொண்டுவந்தோம். (தினமணி, ஜூன்29.2011, புதுச்சேரி -தினகரன்,ஜூலை 2.2011, தி சன்டே இன்டியன் (தமிழ்) 218.2011, டெக்கான் கிரானிக்கல், ஜூலை2.
2014 ஆம் ஆண்டு கீழ்வாலை  ஓவியத்தொகுப்பில்  கண்டறியப்படாத  மிக மங்கிய நிலையில் இருந்த " சண்டை காட்சி " ஓவியம் ஒன்றை ராஜராஜன்   கண்டறிந்து ,ஓவியம் குறித்த  முதல் தகவல்  ராஜராஜனின்  M.F.A முதுகலைப்பட்ட ஆய்வேட்டில் பதிவு செய்து  2014 ஆம் ஆண்டு திருச்சி  அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது  .
பதிவுகளாகிய ஓவியப்பணிகள்.
 புதுச்சேரி வில்லியனூர் லூர்து மாதா கோயில் ஆலய வரலாற்று ஆவணப் படத்திற்கான வரலாற்றுக் காட்சி கோட்டோவியங்கள் - 2010.
  புதுச்சேரி மதர்ஸ் கிரேஸ் ஆப்செட் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட   2013 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியில் வெளியிட " ஓளவையார் " திருவுருவத்தை ஓவியமாக வடிவமைத்து அளித்தது.
 இரட்டைப் புலவர்களான இளஞ்சூரியன், முதுசூரியன் ஆகியோரின் உருவங்கள் கல்கி நட்பு ஸ்பெஷல் இதழுக்காக ஓவியம் தீட்டப்பட்டு பிரசுரமானது (கல்கி 6.12.2009)
 கோபால கிருஷ்ணபாரதி உருவப்படம். மயிலாடுதுறையில் நடைபெற்ற 21ம் ஆண்டு கோபால கிருஷ்ணபாரதிஇசை விழாவிற்காக ஓவியம் தீட்டப்பட்டு 27.2.2009 அன்று முதல் முறையாக பாரதி அவர்களின் படம் திறந்துவைக்கப்பட்டது.
 தமிழகத்தின் மிக மூத்த கோவில் சிற்ப, ஓவியக் கலைஞர்களுள் ஒருவரான சாக்கோட்டை திரு.V.K.S. சிவம் ஸ்தபதி அவர்களின் 70 ஆண்டுகளுக்கு மேலான கலைவாழ்வின் வரலாற்றை அவரிடமே நேரில் அறிந்து கட்டுரையாக முதன் முதலாக “சிவஒளி” பக்தி இதழில் பதிவு செய்தது.
 தமிழகத்தின் பாரம்பரிய தேர்சிற்பக் கலைஞரான மயிலாடுதுறை ஏகாம்பரஸ்பதியார் அவர்களின்நெடிய கலைவாழ்வு மதிப்பீடுகளை, நானும் (இராஜராஜன்) மனித உரிமை ஆர்வலர் திரு. புதுவை சுகுமாறன் அவர்களும் 2001 ஆம் ஆண்டு நேரில் சந்தித்து அவரது வரலாற்றை தொகுத்து “சிவஒளி” பக்தி இதழில் (ஏப்ரல் 2009) முதன்முதலாக பதிவு செய்தது.
 புதுவை சிவம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலுக்காக உருவப்படம் நீர்வண்ண ஓவியமாக தீட்டப்பட்டு நூலின் அட்டையில் இடம்பெற்றது.
 1983ல் ஜூலை இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தையொட்டி தமிழ்நாட்டிற்கு வந்த இலங்கை தமிழர்களுக்கு நிதிதிரட்டும் வகையில் தமிழ் பற்றாளர்களால் 1983ல் நவம்பர் 1 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற “ ஈழத்தின் கண்ணீர்” என்ற ஓவிய, புகைப்பட கண்காட்சியை திராவிடர் கழக பொதுச் செயலாளர் திரு, கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து எழுச்சிமிக்க ஓவியங்களை தீட்டிய கும்பகோணம் ஓவியகல்லூரி மாணவரான ராஜராஜனை பாராட்டி வாழ்த்தினார். ஈழத்தமிழரின் இன்னல்களை விளக்கிய தமிழகத்தின் முதல் ஓவிய கண்காட்சி அதுவே.

ஓவிய நடுவராக / தேர்வாளராக பணி ஆற்றிய இடங்கள் :
 புதுவை ஓவியப் பள்ளி.
ஜவகர் பால்பவன், புதுச்சேரி
புதுவை இந்தியன் ஓவர்சிஸ் வங்கி நடத்திய அகில இந்திய ஓவிய போட்டி புதுவை மண்டலம்
புதுவை கேந்திரிய வித்யாலயா, புதுச்சேரி.
ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி.
 புதுவை பல்கலைக்கழக ஓவிய செய்முறை தேர்வுகள்.
 திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக ஓவிய செய்முறைத் தேர்வு.
தினமலர் ஓவியப்போட்டி, தினகரன் ஓவியப் போட்டி-2003.
புதுவை குடியரசு தின அலங்கார வண்டிகளின் அணிவகுப்பில் பரிசு வழங்கிட தேர்வு செய்யும் நடுவராக புதுவை அரசு சார்ப்பில் நியமிக்கப்பட்டது. 2006.
எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு குறித்து மாநில அளவிலான ஓவியப்போட்டி நடுவராக புதுச்சேரி- 2006.
புதுச்சேரி ஓவியக்கலை பண்பாட்டு நற்சேவை இயக்கம் ஒருங்கிணைத்த  அகில இந்திய ஓவியக் கண்காட்சி” நடுவராக-2009 & 2010.

அரசுப் பணிகள்
 இந்திய அரசு தேர்தல் துறையால் புதுவை சட்டமன்ற தேர்தலுக்காக வாக்குச்சாவடி அதிகாரியாக 2006ல் லாஸ்பேட்டை தொகுதி மற்றும் வில்லியனூர் தொகுதி.
 புதுவை யூனியன் பிரதேச பஞ்சாயத்து தேர்தலில் பாகூர் தொகுதி வாக்குச் சாவடி அதிகாரியாக - 2006.
பாராளுமன்ற பொதுதேர்தல், புதுவை  மாநில மன்னாடிபட்டு தொகுதி வாக்குச் சாவடி அதிகாரியாக -2014.

கலைப் படைப்புக்களை சேகரித்துள்ள இடங்கள்/நிறுவனங்கள் :
தெற்காசிய கல்வி மையம், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து. 2011.
புதுடெல்லியின் மத்திய லலிதகலாஅகாடமி 1997.
சென்னை மண்டல லலிதகலா அகடமி 1996 ரூ 2007
 தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு சென்னை 1998.
 தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சென்னை-1999.
 நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், 1996.
 சுட்டி விகடனுக்காக ஓவியப்பட்டறை கலர் கலாட்டா கடலூர் 2001.
தென்மண்டல கலாச்சார மையம் தஞ்சாவூர் 1996.
பாரதிதாசன் உருவப்படம் கலைப்பண்பாட்டுத்துறை புதுச்சேரி 1996.
டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படம் பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி புதுச்சேரி-1997.
சுவரோவியம், சென்னை ஒவியக்கல்லூரி வளாகம், 1986-2001.
சுவரோவியம் ரேமண்ட் - ஷோரூம்- புதுச்சேரி-1996.
சுவரோவியம் ரேமண்ட் - ஷோரும் சேலம் 1997.
கே.கே. கார்ப்பரேஷன் சென்னை 1996.
குறளோவியம் (தமிழ்நாடு அரசுக்காக “ பருவரலும் பைதலும்” என தொடங்கும் திருக்குறளின் இன்பத்துப் பாலுக்கேற்ற ஓவியம்) நிரந்தர கண்காட்சி வள்ளுவர் கோட்டம் சென்னை-2000.
சிங்கப்பூர், பெல்ஜியம், சவூதி அரேபியா, லண்டன் ஆகிய நாடுகளில் தனியார் சேகரிப்புகள்.
இவை தவிர எண்ணற்ற பத்திரிக்கைகளுக்கு முகப்பு படங்கள் கோட்டோவியங்கள்.
கடந்த 35 ஆண்டுகளில் 10,000 க்கும் மேற்பட்ட வர்த்தக விளம்பரங்கள் நேர்த்தி மிக்க பதாகைகள் சமூக அமைப்புகளின் பிரச்சார பதாகைகள் மேடை அரங்க பின்புற ஓவியங்கள், கண்காட்சி முகப்புகள்.
சிங்கப்பூர் DBS ஆடிட்டோரியத்தில் 01.04.2001ல் நடைபெற்ற திருமதி. ஜெயலட்சுமி சுகுமாரின் பிருமாண்டமான வீணை இசை நிகழ்ச்சிக்கான மேடை பின்னணி கலைமகள் ஓவியம்.
முன்னாள் புதுச்சேரி மேதகு துணைநிலை ஆளுநர் திரு. மல்கானி அவர்களுக்காக ஷேக்ஸ்பியரின் கவிதை வரிகளை ஓவியமாக கொண்ட புத்தாண்டு வாழ்த்து மடல் - 2003.
 முன்னாள் புதுச்சேரி மேதகு துணை நிலை ஆளுநர் திருமதி. ரஜினிராய் எழுதிய “பெண்களின் மேம்பாடு” எனும் நூலின் அட்டைப்பட ஓவியம் 2002.
 வேலூர் ரேமண்ட் ஷோரும் நிறுவனத்திக்கான இரும்பு பீரங்கி 2001.
2006-ஆம் ஆண்டுக்கான அரசு திட்டங்களை ஓவியங்களாக கொண்ட புதுச்சேரி அரசு நாட்காட்டி.
மண்டல லலித்கலா அகாடமி சென்னை-2007.
 “PALAZZO” கேலரி, சென்னை-2006.
 மகாகவி சுப்ரமணிய பாரதியார் உருவப்படம் கலைப்பண்பாட்டுத்துறை, புதுச்சேரி-2006.
 மிகப்பெரிய “ சுவரோவியம்”  ரேமண்ட் ஷோரூம் ஈரோடு - 2010.
 லலித் கலா அகடமி ரீஜனல் சென்டர் சென்னை 2007.
  தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு - சென்னை 2008.
  புதுவை பல்கலைக் கழகம் 2009.
தந்தை பெரியாரின் நீர்வண்ண ஓவியங்களை கொண்ட 2012-ஆம் நாள்காட்டி வெளியீடு - விடுதலைப் புன்னகை, புதுச்சேரி.
விடுதலை பதிப்பகம் வெளியிட்ட தந்தை பெரியாரின் 134 ஆம் பிறந்த நாள் மலரின் முகப்பு ஓவியமாக தந்தை பெரியார் ஓவியம் இடம் பெற்றது. 2013.
வரலாற்று ஓவியம்:
திண்டுக்கல் " எஸ்கேசீஸ் " டெஸ்டைல் ஷோ ரூமில் இடம்பெற்றுள்ள  16 .1/2 அடி  உயரமும், 10 . 1/2 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட கேன்வாஸ் ஓவியம், திண்டுக்கல்லின் வரலாற்று பெருமையை முன்னிருத்தும் ஓவியம் கடந்த  21.4.2017 அன்று திறந்து வைக்கப்பட்டது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் :
 SUN TV யின்  “ வணக்கம் தமிழகம்”  சிறப்பு விருந்தினர் பேட்டி (26.06.2003).
கலைஞர் தொலைக்காட்சியின் ' விடியலே வா " நிகழ்ச்சியில் பேட்டி  (09.07.2013 )
 சன்நியூஸ் செய்தியில் ஸ்ரீ இரும்பை மாகாளேஸ்வரர் கோயிலின் பராமரிப்பு குறித்த பேட்டி 5.11.2003.
ஜெயா தொலைக்காட்சி செய்தியில் “ சுனாமி சீற்றங்கள்”  ஓவிய கண்காட்சி குறித்த பேட்டி  02.05.2005
 தூர்தர்ஷன் செய்தியில் பேட்டி டிசம்பர் 2003.
 புதுவை ஸ்கைசாட் தொலைக்காட்சியில் நம்மில் இவர்கள் 1999.
புதுவை ஏ.எம்.என். தொலைக்காட்சியில் சாதனையாளர்கள் பேட்டி (11.05.2002)
 “ நம் விருந்தினர்” சென்னை தூர்தர்ஷன் பொதிகையில் பேட்டி (24.04.2009)
 தூர்தர்ஷனின் " புதுவைக் களஞ்சியம்" நிகழ்ச்சியில் ஓவியர் .ராஜராஜனின் கலை வாழ்க்கை  அகமும் புறமும். 2014.
தூர்தர்ஷனின்  சிறப்பு நிகழ்ச்சியான "கீழ்வாலை ஓவியங்கள் " ஆவணப்பதிவில் ,கீழ்வாலை ஓவியங்கள் குறித்த பேட்டி. 2014.
மிகப்பெரிய கொலாஜ் ஓவியம் உருவாக்கியதையொட்டி ராஜ் நியூஸ், ஜெயா நியூஸ்,  NDTV - HINDU போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப பட்டன.
 DRY PASTEL எனும் வண்ணக் கட்டிகளைக் கொண்டு 12 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்ட பூம்புகாரின் எழில் மிகக் காட்சிகளை ஓவியமாக தீட்டிய போது ராஜ் நியூஸ் 24X7   செய்தியில் 5.10.2010.

 விருதுகள் / பரிசுகள் :
 சிறந்த ஓவியத்துக்கான ஓவியக்கல்லூரி விருது, கும்பகோணம் 1982.
 சிறந்த வாழ்த்து அட்டை தயாரித்ததற்கான ஆனந்த விகடன் பரிசு ,1996.
 “கலாபீடம் விருது” குண்டூர் (ஆந்திரா) 1994.
  சிறந்த கோட்டோவியத்திறகான விருது. புதுவை 1993.
 மிகப்பெரிய பதாகை உருவாக்கியதற்கான சீர்காழி ஜூனியர் சேம்பர் நினைவுப் பரிசு 1990.
 புதுவை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் இயல், இசை, நாடக சபா சார்பாக சென்னை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் மன்றத்தில் 9.07.2001 அன்று சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர், பொற்கோ அவர்களால் இராஜராஜனுக்கு “சேவாரத்னா விருது”வழங்கப்பட்டது.
  1993-ஆம் ஆண்டு புதுவையில் நடைபெற்ற தேசீய ஓவியர் முகாமில் கலந்துகொண்ட ஓவியர்களுக்கு ராஜ்நிவாசில் அப்போதைய மேதகு துணைநிலை ஆளுநர் திரு. ஹர்சொருப்சிங் அவர்களால் நினைவுப் பரிசும், சான்றிதழும் இராஜராஜனுக்கு வழங்கப்பட்டது.
  பாண்டிச்சேரி மெட்ரோ ஜுனியர் சேம்பர்மற்றும், ஸ்டார் சாட் விஷன் தொலைக்காட்சி சார்பில் டிசம்பர் 9,2001 அன்று “கோடீஸ்வரராவ் விருது” புதுவை ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் திரு. இராமலிங்கம் அவர்களால் இராஜராஜனுக்கு புதுவையில் வழங்கப்பட்டது.
  “கலைப்படைபாளி விருது” புதுவை ஓவியக்கலை பண்பாட்டு நற்சேவை இயக்கம் சார்பாக 2006ஆம் ஆண்டு புதுச்சேரியில் வழங்கப்பட்டது.
  அளப்பறிய “கலை, கலாச்சார படைப்பாற்றலுக்கான விருது” இந்திய ஜூனியர் சேம்பர் இன்டர் நேஷனல் புதுச்சேரி மண்டலம் சார்பாக 29.82009 அன்று புதுச்சேரியில் வழங்கப்பட்டது.
  மிகப் பெரிய கொலாஜ் ஓவிய சாதனைக்காக இராஜராஜனுக்கும், பணியாற்றிய 8 மாணவர்களுக்கும் அரிக்கமேடு ஆர்ட் அகடமி, புதுவை புதிய தூரிகைகள் சார்பாக புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு. ந.அரங்கசாமி அவர்களால் பாராட்டு சான்றிதழ் 29.08.2009ல் வழங்கப்பட்டது.
  மிகப்பெரிய கொலாஜ் ஒவியம் (THE GLOBAL WORLD RECORD- LARGEST COLLAGE PAINTING - THE LAST SUPPER -2011)மஎனும் சாதனையாளர்களுக்கான அமைப்பு 2011-ஆம் ஆண்டுக்கான உலக சாதனையாக இந்த கொலாஜ் ஓவியத்தை அங்கீகரித்து அறிவித்துள்ளது.
ASSIST WORLD RECORD FOUNDATION எனும் உலக சாதனைக்கு உதவும் நிறுவனம் மேற்குறிபிட்ட கொலாஜ் ஓவியத்தை 2012 இல் உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.
2012 ஆம் ஆண்டுக்கான "ஓவியத்துறை விருது" RED HOT TEAM ENTERTAINMENT ,PUDUCHERRY, அமைப்பு சார்பாக புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர், மாண்புமிகு.பி.ராஜவேலு அவர்களால்  14.4.2013 அன்று வழங்கப்பட்டது.

"கலை சாதனையாளர் விருது", புதுவை ஓவியக்கலை பண்பாட்டு நற்சேவை இயக்கம் சார்பாக புதுவை மாநில கல்வி அமைச்சர் மாண்புமிகு கே.தியாகராஜன் அவர்களால் 2012.ல் வழங்கப்பட்டட்து.

செய்தித்தாள்கள் - இதழ்களின் பதிவுகள் :
இராஜராஜன் தீட்டிய பூம்புகார் ஓவியத்திற்காக தினத்தந்தியில் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பாராட்டு.
கேள்வி : கடல் கொண்ட பூம்புகார் நகரின் எழில்மிகு தோற்றத்தை: புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட ஓவிய விரிவுரையாளர் ராஜராஜன் ஓவியமாகத் தீட்டியுள்ளாரே?
பதில் : நாளேட்டில் வந்த ஓவியத்தை நானும் கண்டேன், மகிழ்ச்சி மிகக் கொண்டேன். ஓவியர் ராஜராஜன் அழகாகத் தீட்டியுள்ளார். அந்த ஓவியத்தைப் பார்த்ததும், தேன் தமிழ்க்காவியமாம் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் எழுதியுள்ள:
                                கோவியன் வீதியும், கொடித்தேர் வீதியும்
                                பீடிகைத் தெருவும், பெருங்குடி வணிகர்
                                மாடமறுகும் மறையோர் இருக்கையும்
          வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
                               ஆயுள் வேதரும், காலக் கணிதரும்
                               பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்
(அதாவது அரசப் பெருந்தெருவும், கொடியணிந்த தேரோடும் விழா வீதியும் கடைத்தெருவும் பெரிய குடிப்பிறப்பையுடைய வணிகரது மாட மாளிகைகள் இருக்கும் தெருவும், வேதம் ஓதுவார் இருக்குமிடங்களும், மக்கள் விரும்பும் குடியினரான உழவரோடு மருத்து நூலோரும், காலத்தைக் கணிக்கும் சோதிடர்களும் இவ்வாறு வேறு வேறு வகைப்பட்டோர் இருக்கும் குடியிருப்புக்களும்) - உயிர்த் துடிப்பானவரிகளே எனது நினைவுக்கு வந்தன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி, அவர்களின் 16.11.2010 அன்றைய தினத்தந்தியில் அறிக்கை.
ஆனந்தவிகடன் இதழில்
இராஜராஜனிடம் குறிப்பிடத்தக்க அம்சம்... நவீன ஓவியத்துக்கு வந்துவிட்ட பிறகும் ரியலிசத்தை விடாமல் இருப்பது! தஞ்சை வட்டாரத்தில் பல கோயில்களுக்கும் போய் அவற்றின் தோற்றம், உள்ளே இருக்கும் விசேஷமான சிலைகள் என்று எல்லாவற்றையும் வரைந்து வருகிறார்! கிட்டதட்ட ஐம்பது கோயில்களை இதுவரை விதவிதமாக ஓவியங்களாக்கி இருக்கிறார். ஓவியமா, புகைப்படமா என்;று தடுமாறவைக்கும் கச்சிதம்.
சுரேஷ்சந்திரன், ஆனந்த விகடன், ஆகஸ்ட் 22, 1999.
  Not Your usual Government Calendar:
The Pondicherry Government’s latest calendar is not your usual government calendar, to say the least. The calendar, designed and printed by the Government Central press, Contains 12 paintings by R. Rajarajan, a lecturer in painting at the Bharathiyar Palkalai Kodam, done in soft water colors, the paintings are novel and pleasing to the eye.
Deepa H. Ramakrishnan the Hindu, Chennai, January - 18-2006.

 Simplicity in Colour :
He was chosen to do the painting for the New Year greeting card that the present Lt. Governor K.R. Malkani sent out this year. “The Lt. Governor gave me a quote for Shakespeare which describes a scene on the seashore where dolphins play and a mermaid sits atop one of them. The beautiful singing of the mermaid makes the sea calm and the stars dance. After about 10-11 tryouts he liked it”
And he adds : “It was a great experience to talk and work with  him for me because in my family no one has even seen the Governor - let alone speak with him. Working with Lt. Governor Dr. Rajani Rai on Women’s Empowerment. When the 133-ft tall Valluvar statue was installed in Kanyakumari, he was also one of the 133 painters who drew one couplet from each adhikaram from the Thirukural.
A nationally acclaimed painter, he has participated in several nations - level exhibitions. Though he does a lot of painting, illustrations for magazines mural making and model - making works outside, he involves his students in them. It each the boys all that I know and tell them that they must improve and improvise upon the basics that I give them, he says.
     - The Hindu, Chennai, Thursday, January 30, 2003.
· Arts and the man :
His observation skills and eye for detail are so immense that his paintings of old temples and idols also take note of cobwebs around he idols and temples. Subjects like human rights violations and violence in daily life find powerful expression in his paintings, he has a penchant for murals and is comfortable with any medium of paintings, be it oil or water colours His portraits in pen and pencil have caught the attention of many.
For Rajarajan, donning the role of a teacher has offered him a new kind of experience. Though the feels the students are largely cramped with more theory than outdoor activities, he says it is important for the budding artists to have a strong foundation on the basis but at the same  time exposure to outdoors alone world widen their vistas of life. Also, based on the staunch belief that teachers have a major role in inspiring the students and should be a role model to them, Rajarajan treads very carefully in guiding his students.
For him, a painter is more a yogi and unless he charts out certain discipline and make the whole living process a kind of meditation he would fail to go far.
- D. Sivarajan, The New Indian Express (Weekend Blitz) 18.09.2004.

·R. Rajarajan also interprets a particulars landscape type but in a more literal and literary manner. His compositions with ruined temples have architectural motifs steps, lingas, sculpted panels, etc-donein sharp whites which contrasts a little theatrically with the dark backgrounds of intense red and oranges mixed with active greens. All is subjected to an angular rhythm of slightly prismatic inner segments. The drawings like strokes pronounced in the architectural elements were meant to enhance the common effect which, however weekends due to the artificially and obvious treatment as in the image of a jagged shrub over a stone slab.
- Marta Jakimowicz-shah for Deccan Herald, Bangalore, May 03,1986.

  “Reflections” Painting by R. Rajarajan bagged a prize for the best work. Using a mix of red, orange and yellow colors, the carefully crafted painting attracts the art lovers.
- News Time, Gundur (A.P), Feb 17, 1994.
·      Rajarajan’s Paintings are attractive, the top portions resemble archaeological remains while the foreground is an abstract landscape; the coloring   is quite clever.
- Lakhsmi Venkataraman, the Hindu, Chennai, Mar. 06, 1998.
 KEELVALAI  SPECIALITY
Illegal quarrying poses threat to rock paintings:
“Over a 100 figures drawn on the rocks using red ocher are found in several clusters in Keelvalai Village. The paintings are international Heritage and have close links with rock art sites in Egypt, Greece and Africa. However, a number of these rock art sites have been vandalize while these that have suffered less damage may disappear soon due to indiscriminate quarrying” says. Mr. R. Rajarajan, Assistant professor, Bharathiar Palkalai Koodam.
S. Prasad - Deccan Chronicle, Chennai 2-July 2011.

தினமணி ஞாயிறு கொண்டாட்டம்:
 எழுத்து வடிவிலிருந்து இலக்கியத்தை ஓவிய வடிவமாக மாற்றிவருகிறார். புதுச்சேரி அரசின் பாரதியார் பல்கலைக் கூட ஓவியப் பேராசிரியர். ஆர். ராஜராஜன். இலக்கிய ஆதாரங்களை வைத்துக் கொண்டு காலத்தை கற்பனையில் பார்ப்பது ஒரு வரம். ராஜராஜனுக்கு அது கைவந்திருக்கிறது. சிலப்பதிகாரத்தை அடிப்படையாக கொண்டு பூம்புகார் நகரம் அப்போது எப்படி இருந்திருக்கும் என்ற வகையில் ஓவியமாக தீட்டியுள்ளார். சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள, அந்த நகரத்தின் அம்சங்களையெல்லாம் இந்த ஓவியங்களில் கொண்டு வர உழைப்பை கொட்டி இருக்கிறார்.
 ந.குப்பன், தினமணி, 13.03.2011

முகவரி :
ஆர். இராஜராஜன்,
துணைப் பேராசிரியர் ஓவியம்,
நுண்கலைத்துறை, பாரதியார் பல்கலைக்கூடம்
அரியாங்குப்பம், புதுச்சேரி-605007.
மின் அஞ்சல் : rajarajanartist@gmail.com
இணையதளம் : http://rajarajanartist.blogspot.in
“எனது தேடலும், சோர்விலா பயணமும்,
எதையோ சாதிக்கும் வல்லமை கொண்டது.
நான், வரலாற்றை வாசிப்பதும், காலத்தை நேசிப்பதும்,
மகத்தான வேள்விகளை விதைப்பதற்காக “
ஏனெனில்,
நான் மரித்தும் வாழ முற்படும் மனிதன் !

- ஓவியர் ஆர். இராஜராஜன்.

8 comments:

  1. Excellent contribution for fine art society.... Keep it up Thankyou

    ReplyDelete
    Replies
    1. Dear Artis Stubert sibi, thank you for your nice Expressions about the "kala kurippu". kindly watch my paintings at your convenience. thanks ,
      R.Rajarajan.

      Delete
  2. Your life and career is very inspiring sir. My best wishes for you to get more and more accolades and awards.

    ReplyDelete
  3. Your life and career is very inspiring sir. My best wishes for you to get more and more accolades and awards.

    ReplyDelete
  4. thank you dear kalki, our life is a wonderful opportunity. we will try to do some thing . thank u for a good message . R.Rajarajan.

    ReplyDelete
  5. மலைத்து விட்டேன். தங்களை இன்னும் நேரில் சந்திக்காத்து என் துரதிஷ்டம்.

    ReplyDelete
  6. Your journey is very inspiring sir... its very usefull for upcoming artists like us...thank you

    ReplyDelete
  7. மிகச்சிறந்த சாதனைகள் உழைப்பின் சிகர வெற்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் . பேராசிரியர் ஆ.திரு நாகலிங்கம் புதுச்சேரி

    ReplyDelete