Monday, January 20, 2014

கடந்த 2001 ஆண்டு ,சிங்கப்பூரில் உள்ள காரைக்குடி ஜெயலட்சுமி சுகுமார் அவர்களின் பிரமாண்டமான வீணை இசை நிகழ்ச்சி DBS ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. அதற்காக மேடை பின்னனியை அலங்கரிக்க ஓர் கலைமகள் ஓவியம் தேவை என கேட்டிருந்தார்கள். மிக குறுகிய கால அவகாசத்தில் அந்த பணியை செய்திட வேண்டியிருந்தது. இருபுறமும் தூண்களும்,சிற்பமும் இருப்பதாக திட்டமிட்டிருந்தேன். ஓவியத்தை முடித்ததும் அதை மடித்து விமானத்தில் அனுப்ப வேண்டும் என்பதால் ,பல முறை மடிக்க வேண்டிய போதிலும் ஓவியம் உடையாத தன்மை கொண்டதாக இருக்க வேண்டும், சுமார் 150 மீட்டர்கள் கொண்ட துணியை தைத்து அதில், கவணமாக ஓவியத்தை தொடங்கி னேன். எனது மாணவர்கள் மயிலாடுதுறை டி.ஆர்.செல்வம், திரு. ஆரோவில் ராமலிங்கம்,திரு.கன்னனூர் ராமலிங்கம்,திரு.மார்கண்டன்.திரு.சக்திவேல்.திரு.சுரேஷ். போன்றவர்கள் உதவிமட்டுமல்லாது, அரியாங்குப்பம். தோழர்.வீர.மோகன், தோழர்.ஆனந்த்.தோழர். கோ.சுகுமாரன் போன்றோர் பல்வேறு கள உதவிகளை செய்திருந்தார்கள். ஓவியம் முடிந்ததும் அதை சிங்கபூரில் உள்ள அரங்கத்தில் எந்த சிரமமும் இல்லாது அலங்கரிக்க ஏதுவான ஹூக்குகள், கம்பி வளையங்கள் போன்றவற்றை பொருத்தி உள்புறம் ஓவியத்தின் மடிப்புகள்ஒன்றோடு ஒன்று ஒட்டாதபடி "பட்டர் "காகிதங்களை நடுவில் வைத்து மடிக்க துவங்கினோம் எப்படி சிறியதாக மடித்த போதும் 16 மடிப்பாக வந்தது. ஈரம் படாத படி கச்சிதமாக பேக் செய்த பின் 6 அடி நீளமும்,5 அடி அகலமும், 2 அடி கணமுமாக பார்சல் தயாரானது.காரில் எடுத்துச் சென்று சென்னை யில் இருந்த அவர்கள் நண்பரிடம் கொடுத்துவிட்டு வந்தோம். ஏர்போர்ட்டில் ஸ்கேன் செய்தபோது பார்சலுக்குள்ளே இருந்த கம்பி வளையங்களால் எழுந்த சந்தேகத்தால் சற்று தாமதமாகி உரிய காலத்துக்குள் சிங்கப்பூர் சென்று அந்த வீணை இசை நிகழ்ச்சி மிக வெற்றிகரமாக நடை பெற்றது. இந்த ஓவியம் குறித்த செய்தி அப்போது ஆனந்த விகடன் இதழிலும் வெளிவந்தது. 12 வருடங்களுக்கு முன் நடந்த இந்த நிகழ்வை நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

No comments:

Post a Comment