Monday, January 20, 2014

தமிழ்நாட்டின் கடை கோடி சமூகம் என்றால் அது இருளர் தான்,தேசத்துக்கு இருபது லட்சம் கோடி பட்ஜட் என்றாலும் எந்தவித்திலும் இருளர்களின் வாழ்வில் முன்னேற்றமே ஏற்பட்டதில்லை.வாக்குரிமை மட்டும் எப்படியோ கிடைத்துவிட்டாலும் ,கல்வி,வாழ்விடவசதி,சுகாதாரம்,வேலை வாய்ப்பு,சாதி சான்றிதழ் போன்றவை கடிணம்தான், போதாகுறைக்கு கயவர்களின் கற்பழிப்பு கொடுமை வேறு.இவர்களின் இன்னல்களுக்கு கேட்க நாதி இல்லை என்ற நிலையில் தான் .திண்டிவனத்தை சேர்ந்த பேராசிரியர்.திரு கல்யாணி அவர்கள் பத்துவருடங்களுக்கு முன் “பழங்குடி இருளர் பாதுகாப்பு அமைப்பு “ ஒன்றை ஏற்படுத்தி இருளர்களின் கல்வி, மற்றும் வாழ்வாதார சிக்கல்களுக்கு உதவி வருகிறார்.அமைப்பை ஆரம்பித்தபோது, இருளர் ஓவியம் ஒன்றை வரைந்து தரும்படி கேட்ட போது இந்த கோட்டோவியத்தை வரைந்து கொடுத்தேன்,அவர்களின் துண்டு பிரசுரம்,சுவரொட்டி போண்றவைகளுக்கு இதை பயன்படுத்துகிறார்கள். இன்று பேராசிரியர் கல்யாணி அவர்களால் திண்டிவனத்தில் துவக்கப்பட்ட ஆரம்பப்பள்ளியில் பல இருளர் வீட்டு பிள்ளைகள் கல்வி பயின்று வருகின்றனர்.


 "இருளர் " கோட்டோவியம்.

No comments:

Post a Comment