Sunday, January 19, 2014

                                                                  கலை           ஓவியர்.ஆர்.ராஜராஜன் 
                                                                                                                                                   “கலை   என்ற சொல்    “கல்”  என்றும்  “கற்றல்”  என்கிற  செயலாக்கத்தின்  பொருள் கொண்டது.  பொதுவாக  கலை  என்ற  பொருளுக்கு   பல்வேறு  விதமான  அர்த்தங்கள் கூறப்பட்டுள்ளது.    கலை   என்பது செயல் வடிவம் என்றபோதும்  , அதன் உள்ளீட்டான கருத்துக்கு பல்வேறு விதமான பொருள்களை கூறவல்லது.   அழகியல்  என்ற  நோக்கில் , கலை என்பது  தத்துவ  சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டது.   முதலாவதாக கலை என்பது ஓர் செயல் , அல்லது செய்பண்டம். அது உருவாக்கப்படுவது,  அதில் பொதிந்துள்ள புறவய பன்பு மனிதனை கவர்ந்து ஈர்க்கிறது.   அவனது மனதினை பரவசப்படுத்துகிண்றது.      அவனுக்கு இனம் புரியாத  சுகானுபவத்தினை தருகிறது. முதலில் ரசனை குறித்த ஈடுபாடு  மட்டுமல்லாது  மனிதனின் வாழ்வோடு கூடிய அங்கமாக கலை திகழ்கிறது
            ஆதி மனிதன் தனது தொழிலான வேட்டைக்கு பிறகு அடுத்த பொழுது போக்கு அம்சமாகவும் ஆதி கலைகளான  ஓவியம், இசை, நாட்டியம் போன்ற வற்றில் தன்னை ஈடு படுத்திக்  கொன்டிருந்தான.  இத்தகைய கலை முயற்சிகள் யாவும் மனித நாகரீகத்தோடு படிபடியாக மேன்மை  அடைந்தன . கலைகளின்  தொடக்கம்  அது  மனித  மன எழுச்சியின் தன்மைக்கு ஏற்ப தத்தம்  அடையாளங்களுடன்  பரிணாமம்  அடைந்தது. மனிதன் உணவை சமைத்து உண்ண தலைப்பட்ட போது அவன் அறிவுசார்ந்த சமூகத்தினை நிறுவத் துவங்கினான்.  நாகரீகம் என்பது ஒருவரிடமிருந்து ஒருவருக்கு இடம் பெயர்வதைப் போல கலை சார்ந்த  செயல்கள் அனைத்தும் மனித சமூகத்தில் உரிய தளங்களில் பரவி தழைக்க நாகரீகமும், இயற்கைச்சூழலும் மனிதனுக்கு போதிய ஆதரவை வழங்கின.
            குகைகளில் தீட்டப்படும் ஓவியம் என்பது வாழ்வின் ஓர் அங்கமாக தொடர்பு சாதனம் என்பது  மட்டுமல்லாது, அது மனித வாழ்வின் அருள் தரும் சக்தியின் குறியீடாகவும் நம்பினார்கள், குறிப்பாக ,சூரியன்,சந்திரன்,இடி,மழை போன்ற இயற்கையின் எல்லாவற்றையும் தமது வாழ்வின் சுக துக்கங்களோடு தொடர்புடையதாக நம்பி ஓவியத்தின் மீது அளப்பறிய ஈடுபாட்டினை கொண்டிருந்தனர். இத்தகைய தவிர்வற்ற நிலையில் ஓவியமும் மட்டுமல்லாது இதர கலைகளான நாட்டியம் ,இசை  போண்ற நுகர்தரவுகள் மனித மனங்களில் தேங்கியுள்ள உணர்ச்சிகளுக்கு ஏற்ப பல்லாயிரம் ஆண்டுகளாக  கலை என்ற செயலாக்கம் மனித நாகரீகத்தோடு வளர்ந்து,செழித்து, நவீன மாற்றங்களை அடைந்துள்ளது.     

             

No comments:

Post a Comment