Friday, January 24, 2014

தந்தை பெரியாரின் தஞ்சை சிறப்பு மாநாடு  -  3.11.1957
2007 ஆம் ஆண்டு வரையப்பட்ட கோட்டோவியம் இது. நான் வரைந்த தந்தை பெரியாரின் ஓவியங்களில் எனக்கு பிடித்தமானது இந்த காட்சி. ஏதோ ஒரு அவசர தேவைக்காக புதுச்சேரியின் தோழர் .வீரமோகன் கேட்டுக்கொண்டதால் 40 நிமிடங்களில் அரைப்பக்க காகிதத்தில் வரைந்து கொடுத்தேன்.மிக வித்தியாசமான கோணத்தில் அமைந்த இந்த கோட்டோவியம், புன்னகை புத்தக மையத்தின் பல வெளியீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டது. மாதிரி படங்கள் எதுவுமின்றி கற்பனை வடிவமைப்பான இந்த படம் 53 வருடங்களுக்கு முன்பு, தந்தை பெரியார் அவர்களின் எழுச்சி மிக்க உரையை நாமே அருகில் இருந்து கேட்பது போல உணரலாம்

No comments:

Post a Comment